வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி – டி2 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்திலிருந்து எஸ்எஸ்எல்வி – டி2 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதில் இருந்த 3 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.  வளரும் நாடுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்கைகோள்களை பூமியின்…

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்திலிருந்து எஸ்எஸ்எல்வி – டி2 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதில் இருந்த 3 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. 

வளரும் நாடுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்கைகோள்களை பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில்
செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இஸ்ரோ எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்களை உருவாக்க தொடங்கியது.

இஸ்ரோ சார்பாக இதுவரை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட் மூலம் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிலையில் எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்கள் 500 கிலோவிற்கு குறைவான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எஸ்எஸ்எல்வி – டி2  ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோவின் இஓஎஸ்-07 (EOS-07), அமெரிக்க நிறுவனமான அன்டாரிஸ் ஜானுஸ்-1 மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் விண்வெளி நிறுவனத்தின் ஆசாதிசாட்-2(AzaadiSAT-2) என மூன்று செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் இடம்பெற்றுள்ளன.

175.2 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை புவி வட்ட சுற்றுப்பாதையில் 450 கிலோ மீட்டர் உயரத்தில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணில் பாய்ந்த அடுத்த 15 நிமிடங்களில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த முடிவு செய்து இந்த செயற்கைகோள் அனுப்பப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV-D2 | ISRO | Sriharikota - YouTubeஎஸ்எஸ்எல்வி – டி1  ரக ராக்கெட் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. ஆனால்  சென்சார் செயலிழப்புகள் காரணமாக செயற்கைக்கோள்கள் செயல்படாமல் போனது. விரைவில் மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி – டி2 ராக்கெட் உருவாக்கப்பட்டு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அப்போது அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை எஸ்எஸ்எல்வி – டி2 ராக்கெட் விண்ணில்  வெற்றிகரமாக செலுத்தப்பட்டது .

செயற்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய பிறகு இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்ததாவது..

“செயற்கைக்கோள்களை உருவாக்கி சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய 3 செயற்கைக்கோள்களையும்  தயாரித்த குழுக்களுக்கு வாழ்த்துகள். எஸ்எஸ்எல்வி – டி1இல் எதிர்கொள்ளும் சிக்கல்களை நாங்கள் பகுப்பாய்வு செய்தோம்,  அதனை சரிசெய்து அதற்கான  நடவடிக்கைகளைக் மேற்கொண்டோம். 450 கிலோமீட்டர் உயரத்தில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டன.” என்று அவர் கூறினார்.

செயற்கோளை செலுத்தப்பட்டபோது விண்வெளி ஆராய்ச்சியில் கிராமப்புற பெண் குழந்தைகள் சாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இசையமைக்கபட்ட ”ஸ்பேஸ் பாடல் (songs) எனும் பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.