செங்கம் அரசு பள்ளியில் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் , செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தற்போது
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடந்து வருகிறது.
இந்நிலையில், பழுது ஏற்பட்ட மின் மோட்டாரை வெளியில் எடுப்பதற்காக, பள்ளி
மாணவர்களை வைத்து வேலை வாங்கும் அவலம் அரங்கேறி உள்ளது .
பள்ளிக்கல்வித்துறை, பள்ளி மாணவர்களை வைத்து பணியில் ஈடுபடுத்தக்கூடாது என
எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஆனால், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,
இது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவது , கண்டிக்கத்தக்க செயல் என
பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—கு.பாலமுருகன்