முக்கியச் செய்திகள் தமிழகம்

விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஆர்வம் வேண்டும் – அமைச்சர்

படிப்பில் மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் மாணவர்கள் கலந்து கொண்டால் தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சுறுசுறுப்பு அடைய முடியும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 

பள்ளிக்கல்வித்துறை சார்பாக உலகத் திறனாய்வு உடன் திறன் தெரிவுப் போட்டிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும், தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவரவே இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார்.

விளையாட்டு என்று வரும் போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நாம் பலப்பட வேண்டும் என தெரிவித்த அவர், மாணவர்கள் அதை பெறும் போது சமூகமும் அதை பெறும் என கூறினார். விளையாட்டில் அதிகம் ஈடுபடும் போது, உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் சுறுசுறுப்பு அடைவதன் மூலம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த முடியும்.

 

உலக திறனாய்வு உடற்திறன் தெரிவுபோட்டிக்கான செயலி இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த செயலி மூலம் மாணாக்கர்களின் திறன் கண்காணிக்கப்பட்டு அவர்களை தேர்வு செய்வதோடு, விளையாட்டு பயிற்சிக்கான செலவை பள்ளிக்கல்வி துறையே ஏற்கும் என்றும் அன்பில் மகேஷ் விளக்கமளித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதால் மாணவி உயிரிழப்பு

Jeba Arul Robinson

“விடுதலை” சண்டைப் பயிற்சியாளரைப் பாராட்டிய நடிகர் சூரி

Jayasheeba

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட்டில் புதிய தளர்வு!

G SaravanaKumar