மயிலாடுதுறை அருகே, வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி மின் கம்பியில் உரசியதில் தீப் பிடித்தது. இதில் லாரி முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே விசலூர் கிராமத்தில்
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த வைக்கோல் கட்டுகளை, ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று திருப்பூர் சென்றது. அப்போது திருவிடைக்கழியை அடுத்த பெருங்குடி என்ற
பகுதியில், எதிர்பாராத விதமாக வைக்கோல் மின் கம்பியில் உரசியதால் தீப்பிடித்தது.
வைக்கோலில் பற்றிய தீ மளமளவென பரவி லாரி முழுவதும் பரவி தீப்பிடித்தது.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் செந்தில் , உடனடியாக லாரியை
சாலையில் இருந்து அருகில் உள்ள பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தினார். இதனை கண்ட
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தரங்கம்பாடி தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ஜேசிபி இயந்திரம் கொண்டும் லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகளை இறக்குவதற்கு முயற்சித்தும் பயன் இல்லை. இறுதியில் வைக்கோல் மற்றும் லாரி முழுவதுமாக எரிந்தன. வைக்கோலை அதிக அளவில் ஏற்றிச் சென்றதே , இந்த தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
-கு.பாலமுருகன்