முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் மாடிக்கு மாடி தாவிய ஸ்பைடர் மேன்….

சென்னையில் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து ஒவ்வொரு மாடியாக வடமாநில நபர் ஒருவர் தாவிக்கொண்டு இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

சென்னை ஜாம்பஜார் பகுதியில் உணவு விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியின் மூன்றாவது மாடிக்கு ஏறிய வடமாநில நபர் ஒருவர்,  அங்கிருந்து ஒவ்வொரு மாடியாக தாவிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், அவரை திருடன் என்று நினைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எனவே அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாடிக்கு மாடி தாவிக் கொண்டிருந்த அந்த வடமாநில நபரை மீட்டனர். காவல் நிலையம் அழைத்துச் சென்று, அவர் மதுபோதையில் இருக்கிறாரா என்று விசாரணை நடத்தினர்.

இதையும் படியுங்கள் : ஆன்லைன் சூதாட்டம்; சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு – மத்திய அரசு தகவல்

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடைய பெயர் அமிஸ்வர் என்பதும் தெரியவந்தது. மேலும் 39 வயதாகும் அமிஸ்வருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அமிஸ்வர் லோடுமேனாக பணியாற்றி வருவதாகவும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவ்வப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓபிசி கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

G SaravanaKumar

கௌரவ விரிவுரையாளர்களை அமைச்சர் பொன்முடி புறக்கணித்ததாக சர்ச்சை

Dinesh A

கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

Halley Karthik