பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் எனவும் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு குறித்து தீர்மானம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். மேலும், பிப்ரவரி 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு முன், நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் தேதி தொடர்பாக விரைவில் சபாநாயகர் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்த்திருந்தார்.
இந்நிலையில், வரும் 8-ஆம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடப்பெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும், நீட் விலக்கு மசோதாவை ஆளுநருக்கு மீண்டும் அனுப்ப அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டிருந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.