ரூ.5,779 கோடி வருவாய் ஈட்டிய தெற்கு ரயில்வே!

தெற்கு ரயில்வே கடந்த ஆண்டு, பயணிகள் போக்குவரத்தில் ரூ.5,779 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தெற்கு ரயில்வே 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி…

தெற்கு ரயில்வே கடந்த ஆண்டு, பயணிகள் போக்குவரத்தில் ரூ.5,779 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தெற்கு ரயில்வே 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரையிலான நிதியாண்டில் உற்பத்தி சரக்குகள் 3 கோடி 39 லட்சம் டன்கள் கொண்டு சேர்த்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 2 கோடி 74 லட்சம் டன் ஆக இருந்த சரக்கு போக்குவரத்து 24 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரயில்வே வாரியத்தின் இலக்கான 3 கோடியே 22 லட்சம், இது 5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ஏப்ரல்-பிப்ரவரி 2023 வரை சரக்குரெயில் போக்குவரத்தில்
ரூ.3,230.40 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. தெற்கு ரெயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு பிரிவில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மேலும், கடந்த 2022-23 நிதி ஆண்டில் ஏப்ரல்-பிப்ரவரி 2023 வரை, 58.26கோடி பயணிகளை சுமந்து, ரூ.5,779 கோடி வருவாயாக ஈட்டியுள்ளது. இதனிடையே அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் கையாள, முன் பதிவு செய்யப்பட்ட, முன் பதிவு செய்யப்படாத பயணிகள் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களைபண்டிகை காலங்களில் இயக்கி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.