பள்ளி மாணவர்கள் காப்பையும் மாணவிகள் கம்மலையும் அணிந்துவரக் கூடாது என்பது போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளாக சமூக நலத் துறை வெளியிட்ட அறிவுறுத்தல்கள்:
- மாணவ மாணவியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும்.
- மாணவ மாணவியர்கள் தினமும் பள்ளி சீருடையை சுத்தமாக அணிய வேண்டும்.
- தலையில் எண்ணெய் வைத்து தலைவார வேண்டும். கை, கால் நகங்களை சுத்தமாக வெட்ட வேண்டும் மற்றும் தலை முடியை சரியான முறையில் வெட்டியிருக்க வேண்டும்.
- காலில் காலணி அணிய வேண்டும்.
- ‘டக் இன்’ செய்யும்போது சீருடை வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும். பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்றுதான் விடுப்பு எடுக்க வேண்டும்.
- பள்ளிக்குச் செல்லும்போது அடையாள அட்டை அணிய வேண்டும்.
- பிறந்த நாள் என்றாலும் மாணவ-மாணவியர்கள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும்.
- மாணவ-மாணவியர்கள் பள்ளிக்கு இருச்சக்கர வாகனம், மொபைல் போன் போன்றவற்றை கொண்டு வர அனுமதி இல்லை
- வகுப்பறையில் பாடங்களை கவனமாக கவனிக்க வேண்டும்.
- ஆசிரியர் பேச்சை மாணவர்கள் கேட்க வேண்டும்.
- மாணவ-மாணவியர்கள் சீருடையில் பள்ளிக்கு வரும்போது கூடுதலாக கலர் டிரஸ் எடுத்து வரக்கூடாது.
- வகுப்பில் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
- அடிக்கடி கை, கால்கள் கழுவ வேண்டும்.
- மாணவர்கள் எங்கு சென்றாலும் வரிசையாக செல்ல வேண்டும்.
- மாணவ-மாணவியர்கள் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது மற்றும் எந்தவொரு Tattoo போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை.
- மாணவ-மாணவியர்கள் பள்ளிக்கு செல்லும்போது அவர்களின் சீருடை சட்டையிலுள்ள பொத்தான்களை கழட்டக் கூடாது.
- வகுப்பறையில் நோட்டு புத்தகங்களை கிழித்தெறியக் கூடாது.மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது காப்பு, கம்பல், செயின், கயிறு போன்ற ஆபரணங்கள் ஏதும் அணிய கூடாது.
- மாணவ-மாணவியர்கள் P.T. வகுப்பின்போது பள்ளி வளாகத்துள்ளேயே விளையாட வேண்டும். வெளியே செல்லுதல் கூடாது.
- ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது மாணவ-மாணவியர்கள் வகுப்பறையை விட்டு வெளியில் செல்லக் கூடாது இவ்வாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.








