கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி சின்னத்திரை நடிகை தீபா வழக்கு!

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பிரபல சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சின்னத்திரை நடிகை தீபா.  இவர் பல தனியார் சேனல்களில் வெளியாகும் மெகா தொடர் நாடகங்களில்…

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பிரபல சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகை தீபா.  இவர் பல தனியார் சேனல்களில் வெளியாகும் மெகா
தொடர் நாடகங்களில் நடித்து வருகிறார்.  தீபாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி
விவாகரத்து ஆன நிலையில்,  தன்னுடைய மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில்,  தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் கணேஷ் பாபு என்பவர்
உடன் தீபாவுக்கு காதல் ஏற்படவே இருவரும் கடந்த ஆண்டு பதிவு திருமணம் செய்து
கொண்டு தீபாவின் வீட்டில் வசித்து வந்தனர்.  சமீப காலமாக இருவருக்கிடையே
கருத்து வேறுபாடு உருவாகி பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து தீபாவை பிரிந்து கணேஷ்
பாபு வாழ்ந்து வருகிறார்.

இதையடுத்து,  பிரிந்து வாழும் தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி சென்னை
குடும்ப நல நீதிமன்றத்தில் தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.  அதில், தன்னுடைய
கணவர் கணேஷ் பாபுவின் சகோதரர் ராமகிரிவாசன் என்பவர் தனக்கு தொடர்ந்து மனரீதியாகவும்,  பாலியல்ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுத்து வந்ததாலும்,  கணேஷ்
பாபுவின் குடும்பத்தினர் தன்னை சாதிரீதியாக இழிவுபடுத்தியதாலும் தனக்கும்
தன்னுடைய கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எனினும்,  தன்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ்வதையே தான் விரும்புவதால் தன்னை
கணவருடன் சேர்த்து வைக்க வேண்டுமென அம்மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.