சிவகங்கை சொக்கநாதபுரம் ஸ்ரீஉக்ர பிரத்தியங்கிரா தேவி திருக்கோயிலில் நடைபெற்ற 16வது ஆண்டு சத மண்டி பிரத்யங்கிரா தேவி யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகேயுள்ள சொக்கநாதபுரத்தில் அமைந்துள்ளது. அருள்மிகு அருள்மிகு ஸ்ரீஉக்ர பிரத்தியங்கிரா தேவி திருக்கோயில். இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆனி மாதத்தில் இந்த கோயிலில் அம்மனுக்கு சிறப்பு யாகங்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த யாகம் 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 16வது ஆண்டாக நவ சண்டி மகா பிரத்யங்கரா தேவி யாகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து அம்மன் சன்னதி முன்பாக அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் புனித நீர் நிரப்பட்டு கலசங்களை பிரதிஷ்டை செய்து யாகத்தை தொடங்கினர். யாகத்தில் பட்டு சேலைகள், சந்தனம், நெய், எலுமிச்சை உள்ளிட்ட 108 வகையான நறுமண பொருட்கள் சேர்க்கப்பட்டன. நிறைவாக மஹா பூர்ணாகுதியுடன் யாகம் நிறைவுற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.