30.5 C
Chennai
May 14, 2024
தமிழகம் செய்திகள்

சிங்கப்பூர் பிரதமருக்கு கோரிக்கை வைத்த மன்னார்குடி பொதுமக்கள்!

மன்னார்குடியில் அமைய உள்ள லீ குவான் யூ -வின் சிலையை, சிங்கப்பூர் பிரதமர் சியான் லுங்க் நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று மன்னார்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூக்கு மன்னார்குடியில் நினைவு
சின்னம் அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது.

சிங்கப்பூர் நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ நவீன சிங்கப்பூரை உருவாக்கினார். தமிழர்கள் மேல் பற்று கொண்ட அவர் சிங்கப்பூரில் தமிழர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதனால் தஞ்சை டெல்டா பகுதி குறிப்பாக மன்னார்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள இளைஞர்கள் சிங்கப்பூர் சென்று வேலை செய்து பொருளீட்டினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் பெரும் வளர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சமீபத்தில் சிங்கப்பூர் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடியில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ விற்கு சிலை அமைத்து நினைவு மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதலமைச்சருக்ககும், அறிவிப்பிற்கு உறுதுணையாக இருந்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளுகோட்டையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மன்னார்குடியில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என
அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உறுதுணையாக இருந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கு நன்றி தெரிவித்த,
பின்னா்  நினைவு மண்டபத்தில் சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்கள் பங்கு குறித்த கண்காட்சி, நூலகம் அமைக்கப்பட வேண்டும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும், சிங்கப்பூரில் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாதம் தோறும் நடத்த வழிவகை செய்ய வேண்டும், நினைவு மண்டபத்தை திறந்து வைக்க சிங்கப்பூரின் தற்போதைய பிரதமரும் லீ குவான் யூ வின் மகனுமான லீ சியன் லுங் – கை அழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading