பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெய்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். O2 , தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய தமிழழகன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
அரக்கோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. தமிழகத்தின் நகரங்கள், ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும், நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும்படியான கதையமைப்பில் உருவாக்கி இன்று முதல் படப்பிடிப்பைத் துவங்குகிறார்கள்.
இப்படத்துக்கு திரைக்கதை வசனம், – தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார், இயக்கம் – ஜெய்குமார், தயாரிப்பு – லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி, நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித், கலை – ரகு, எடிட்டிங் – செல்வா RK, உடைகள்- ஏகாம்பரம், ஸ்டில்ஸ் – ராஜா, பி ஆர் ஓ – குணா.
-ம.பவித்ரா








