4 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை அளித்த காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், வெள்ளலூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (57). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஒரு குடியிருப்பில் பணிபுரிந்து வந்தபோது, அங்கு வசிக்கும் 4 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கு ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், ரவிச்சந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.