பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடகரும், நகைச்சுவையாளருமான ஜேமி ஃபாக்ஸ் மீது கடந்த புதன்கிழமை அன்று பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
ஜேன் டோன் எனும் பெண், கடந்த 2015 ஆம் ஆண்டு மது அரங்கம் ஒன்றில் ஜேமி ஃபாக்ஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதற்கு பதிலளித்த ஜேமி, அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனை தொடர்ந்து, கடந்த புதன்கிழமை மேன்ஹாட்டனில் உள்ள மாநில உச்சநீதிமன்றத்தில் அந்த பெண், ஜேமி மீது குற்றம் சாட்டியுள்ளார். அந்த வழக்கில் ஜேமி தன் அந்தரங்கப் பகுதிகளை தனது அனுமதியின்றி தன் விருப்பத்திற்கு எதிராக தொட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்:குன்னூரில் கனமழையால் மண்சரிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…
மேலும், அந்தப் பெண் தெரிவித்திருப்பதாவது, அவரும் அவரது தோழியும் மது அரங்கம் ஒன்றில் ஜேமியைச் சந்தித்ததாகவும் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை ஜேமி ஃபாக்ஸின் செய்தி தொடர்பாளர் அப்படி சம்பவம் நடக்கவே இல்லை பதிலளித்தார். மேலும், ஏற்கனவே 2020ல் இதே பெண் இதைப் போன்ற வழக்கைத் தொடர்ந்துள்ளார் என கூறினார். அந்த வழக்கு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
இப்போது மீண்டும் இந்த பொய் குற்றச்சாட்டை வைத்து, தொடர்ந்து ஜேமிக்கு அவப்பெயர் தேடித் தருகிறார்கள். இந்த பொய்யான வழக்கும் விரைவில் தள்ளுபடி ஆகிவிடும், அதன் பின் அந்தப் பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் மீது ஜேமி வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.