”மின்உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி”

மின் உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் சம்பத்குமார் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில்…

மின் உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் சம்பத்குமார் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் சொந்த மின் உற்பத்தி குறைந்துவிட்டதாக குறிப்பிட்டார். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று முற்றிலும் தவறானது என்றும்,  4 லட்சத்து 52 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 50% மின்சார பயன்பாடு அதிகரித்த போதும், கட்டணம் அதிகளவில் வசூலாகவில்லை என்றும், மின் துறையில் தமிழ்நாடு அரசை ஒவ்வொரு முறையும் தவறான தோற்றத்தில் சித்தரிக்க முயற்சித்து வருகிவதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கடந்த 9 மாத காலமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி,  மின் உற்பத்தியை பெருக்குவதற்காக சிறப்புத்திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.மின் கட்டண கணக்கீட்டில் எங்கு குறை உள்ளது என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டினால், உடனடியாக சரி செய்யப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.