தமிழகம் செய்திகள்

சீீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடக்கம்!

சென்னை அருகே கேளம்பாக்கத்தை அடுத்த படூர் ஊராட்சியில்  சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தை அடுத்த படூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று தொடங்கியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று கடந்த 26.02.23 அன்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டிருந்தது. இதனை தொடர்ந்து  ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் கருவேல மரங்கள் அகற்றும் பணியை துவங்கி வைத்தார். இதனை அடுத்து மரங்கள் அகற்ற ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மரங்கள் அறுக்கும் இயந்திரங்களை கொண்டு மரங்களை அகற்றும் பணி தொடங்கியது. மேலும் ஊராட்சியில் உள்ள அனைத்து சீமை கருவேல மரங்களையும் மூன்று மாதத்திற்குள் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உயர்நீதிமன்றங்களில் வெள்ளிக்கிழமைகளில் ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணை – உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் அறிவிப்பு

Jayasheeba

டிஎன்பிஎஸ்சி தலைவராக முனியநாதன் நியமனம்

Web Editor

சிறுமி வன்கொடுமை வழக்கு- குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

EZHILARASAN D