கர்நாடக முதலமைச்சருக்கு மதுரையைச் சேர்ந்த சமூகநீதி பேரவை சார்பில் பெரியாரின் உருவம் பொறித்த “ செங்கோல்” வழங்கப்படுகிறது.
இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு கடந்த மே 28ம் தேதி திறக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவின்போது தமிழ்நாட்டைச் சார்ந்த 20 ஆதீனங்கள் பங்கேற்று தமிழில் தேவாரம் பாடி பூஜைகள் செய்து நாடாளுமன்றத்தில் நிறுவுவதற்காக செங்கோலை பிரதமர் மோடியிடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் மதுரையைச் சார்ந்த மக்கள் சமூக நீதிப் பேரவை நிர்வாகிகள் பெரியாரின் உருவம் பொறித்த செங்கோலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு வழங்க உள்ளனர். இந்த செங்கோலில் தங்க முலாம் பூசப்பட்ட பெரியாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
30 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் சமூக நீதிப் பேரவையின் தலைவர் மனோகரன் ஆகியோர் இன்று மாலை சித்தராமையாவை சந்திக்கின்றனர். மேலும் கர்நாடக முதல்வரிடம் பெரியாரின் செங்கோலை வழங்கி ஜனநாயகத்தையும் , சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளனர்.