சேலம் மாவட்டம் ஆத்தூரில் பெண்குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாராத்தான் போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்துர் அருகேயுள்ள கெங்கவல்லியில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஒன்றிணைந்து பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு மாராத்தான் போட்டியை நடத்தின. பெண்களின் பாதுகாப்பு, பெண் கல்வி ஊக்குவிப்பு உள்ளிட்டவற்றை மையப்படுத்தி சுமார் 5.5 கிமீ தூரம் நடைபெற்ற இம்மாராத்தான் போட்டியில் ஆண், பெண் என இருபாலினத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சேலம் தபால் நிலையம் முன்பு துவங்கிய மாராத்தான் போட்டியானது நான்குரோடு வழியாக வந்து யூனியன் அலுவலகம் வரை வந்து நிறைவடைந்தது. ஆண்களுக்கான பிரிவில் முதல் மூன்று இடங்கள் முறையே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிதாஸும், சேலத்தை சேர்ந்த அரவிந்த், ஆபிஷேக் உள்ளிட்டோரும் பெற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்கள் முறையே கெளரி,வைத்தீஸ்வரி,தமிழரசியும் பெற்றனர்,போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டியில் ஆறு முதல் அறுபது வயது வரையிலானோர் ஆர்வமுடன் பங்கேற்றது காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.