33.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

பிரபல நடிகைக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகைக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது.

பாலிவுட்டின் மூத்த நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், கடந்த ஜூலை மாதம் கால மானார். இந்நிலையில் அவர் மனைவியும், மூத்த நடிகையுமான சாய்ரா பானுவும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சாய்ரா பானு, நடிகர் ஆர்யா மனைவியான சாயிஷாவுக்கு பாட்டி.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் 3 நாட்களுக்கு முன் சாய்ரா பானுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடு த்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு மதிக்கப் பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளனர். சரியான நேரத்தில் அவருக்கு ஆஞ்சியோ செய்யப்படும் என்றும் முதலில் அவருடைய சர்க்கரை அளவை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading