மண்டல, மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோயில் நடை வரும் 15-ஆம் தேதி மாலை திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, 15-ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாளான 16 ஆம் தேதி முதல் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அது இல்லாத பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே சித்திரை ஆட்ட சிறப்பு பூஜையை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கிருந்த பக்தர்களுக்கு தந்திரி பிரசாதம் வழங்கினார். சித்திரை ஆட்ட சிறப்பு பூஜைகள் இன்றும் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.