ரஷ்யா-உக்ரைன் இடையேயான பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என ஐநா சபை அவசர கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐநா சபையின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இந்தியாவுக்கான ஐநா பிரநிதி திருமூர்த்தி, ரஷ்யா-உக்ரைன் இடையேயான விவகாரமானது அந்த பிராந்தியத்தில் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் ஊறுவிளைவிப்பதாக கூறியுள்ளார். இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் சுயகட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படியும் இந்தியா வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளை அங்கீகரித்த ரஷ்யா: தொடரும், போர் பதற்றம்
20 ஆயிரத்துக்கும் மேலான இந்திய மாணவர்கள், இந்திய மக்கள் உக்ரைனின் பல பகுதிகளில் வசிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பே தங்களது முன்னுரிமை என்றும் கூறியுள்ளார். சர்வதேச அமைதி, பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் இந்திய பிரதிநிதி திருமூர்த்தி பேசியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.