உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளை அங்கீகரித்த ரஷ்யா, தனது படைகளை அங்கு குவித்து வருவது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
உக்ரைனின் வசம் இருந்த டொனெட்ஸ்க் நகரம் உள்ளிட்ட உக்ரைனின் கிழக்கு பகுதியை சேர்ந்த சில பகுதிகள் உக்ரைனில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தன. இந்த பகுதிகளை ரஷ்ய அதிபர் புதின் அதிகாரப்பூர்வமான ரஷ்யா பகுதிகளாக கடந்த 21-ஆம் தேதி அங்கீரித்தார். இது, சர்வதேச அளவில் பெரும் சர்சைகளை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் உக்ரைனின் கிழக்குப்பகுதியான டொனெட்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. இதன்படி, டொனெட்ஸ்க் நகருக்கு அருகே ரஷ்யாவின் ராணுவ டேங்குகள் தென்பட்டதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்மாக தெரிவித்துள்ளது. அதே போல, உக்ரைனை சுற்றி ஏறக்குறைய 2 லட்சம் படையினரை ரஷ்யா குவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அண்மைச் செய்தி: இந்தியா: 14000-ற்கு கீழாக குறைந்த கொரோனா தொற்று
இந்த சூழலில் ரஷ்யாவின் செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதியுடன் அமெரிக்காவின் வர்த்தக தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராகவும் பொருளாதார தடைகள் விதிப்பது குறித்து அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
இந்த சூழலில் தொலைகாட்சி வழியே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனின் கிழக்குப் பகுதிகள் பண்டைய கால ரஷ்யாவின் பகுதிகள் என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவுக்கான ஐநா சபை தூதர் வாசிலி நெபன்சியா, ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கும் முன்பு ஒருமுறைக்கு இரண்டுமுறை மேற்கு நாடுகள் யோசிக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளார். நிலமையை மேலும், மோசமாக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.