இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தகுதியான ஊழியர்களை ஊக்கப்படுத்திடும் வகையில் பங்குகளை வழங்கியுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நேரத்தில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் (Infosys) தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாளர்களாக இருக்கும் ஊழியர்களுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்குகளை ஒதுக்கி வெகுமதி அளிக்க முடிவு செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி இன்ஃபோசிஸ் நிறுவனம் தகுதியான ஊழியர்களுக்கு 5 லட்சத்து 11 ஆயிரத்து 862 பங்குகளை மே 12 ஆம் தேதி அன்று ஒதுக்கியுள்ளதாக நேற்று பங்கு சந்தைகளில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனத்தில் ஊழியர்களின் உரிமை மேம்படுத்தும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு திட்டங்களின் வாயிலாக ஊழியர்களுக்கு இந்த பங்குகள் ஒதுக்கீடு செய்து வெகுமதி அளித்த அந்த நிறுவனம் முதலில் Stock Incentive Compensation Plan அதாவது 2015 ஆம் ஆண்டு பங்கு ஊக்கத்தொகை இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,04,335 பங்குகளும், இதுபோக Expanded Stock Ownership Program என்று சொல்லப்படும் இன்ஃபோசிஸ் விரிவாக்கப்பட்ட பங்கு உரிமையாளர் திட்டம் 2019 இன் கீழ் ஊழியர்களுக்கு 4,07,527 பங்கு பங்குகளையும் ஒதுக்கியுள்ளது.
கடந்த வாரம் பங்கு சந்தை முடிவில் இன்ஃபோசிஸ் பங்கு விலை 1247 ரூபாயாக முடிவடைந்துள்ளது. வெள்ளிக் கிழமை அன்று இன்ஃபோசிஸ் பங்கு விலை 0.72 சதவீதம் குறைந்துள்ளது. அண்மையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இதில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருமானம் திருப்திகரமாக இல்லை என்பதால் இன்ஃபோசிஸ் பங்கு விலை சரிந்தது. இன்ஃபோசிஸ் பங்கு மட்டுமல்லாமல் டிசிஎஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா போன்ற மற்ற ஐடி நிறுவனங்களின் பங்குகளும் சரிந்துவிட்டன. குறிப்பாக இன்ஃபோசிஸ் பங்கு விலை 1300 ரூபாய்க்கு கீழ் நீடித்து வருகிறது. ஐடி நிறுவனங்களின் வருமானம் திருப்திகரமாக இல்லாதது உலக பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதற்கான ஒரு அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பெங்களூரை தளமாகக் கொண்ட ஐடி நிறுவனங்கள் ஏதேனும் வேறு வாய்ப்புகளைப் வழங்குகிறதா என்பது குறித்து கருத்து தெரிவித்த இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி, சலில் பரேக் நிறுவனத்தின் இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் (எம்&ஏ) திட்டங்கள் குறித்த பெரிய புதுப்பிப்பைப் பகிர்ந்து கொண்டார். அப்போது தற்போதைய சூழலில் இன்ஃபோசிஸ் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் இடத்தில் ஊழியர்களுக்கு நல்ல வாய்ப்புகளை கொடுக்கிறது என்று கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா