கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிரிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்தில் வீசி எறிந்த ஆர்ம் பேண்ட்(arm band) ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பைக்கான தகுதி போட்டியில், போர்ச்சுகல் அணிக்கு எதிராக செர்பிய அணி விளையாடியது. அந்த போட்டியில், 2-2 என்ற எண்ணிக்கையில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. ரொனல்டோ வெற்றிக்கான கோலை அடித்தும், போட்டியில் இருந்து போர்ச்சுகல் அணி நீக்கப்பட்டது. இதனால், கால்பந்து உலக கோப்பை 2022 போட்டிக்கான தகுதியை இலந்ததால், ரொனால்டோ விரக்தியில் தன் ஆர்ம் பேண்டை(arm band) மைதானத்தில் வீசி ஏறிந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து, மைதானத்தில் இருந்த ஒருவர் அவருடைய ஆர்ம் பேண்டை எடுத்து, அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தைக்கு சிகிச்சையளிக்க தேவையான நிதி திரட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாட்டு சேனல் ஒன்றை தொடர்பு கொண்டுள்ளார். அவர் கூறியதை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் சரிபார்தத பின்னர், அந்த சேனல் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆர்ம் பேண்டை ஆன்லைனில் ஏலத்திற்கு விட்டது. இதன் மூலம் அந்த குழந்தைக்கு தேவையான நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.