முக்கியச் செய்திகள் விளையாட்டு

புதிய சாதனை படைப்பாரா ரோகித் சர்மா?

இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசினால் டி 20 போட்டியில் 400 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனைய படைக்க ரோகித் சர்மாவுக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, மும்பை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள ஐபிஎல் டி20 போட்டியில் 3 சிக்ஸர்களை விளாசினால் இந்திய வீரர்களில் 400 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார். தற்போது டி20 போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா எட்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் மேற்கு இந்திய அணி வீரர் கிறிஸ் கெயில் முதலிடத்திலும், இவருக்கு அடுத்தபடியாக பொல்லார்ட், ஆண்ட்ரே ரஸல், பிரெண்டன் மெக்கல்லம், ஷேன் வாட்சன், ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் உள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்திய வீரர்களில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 397 சிக்ஸர்களுடன் ரோகித் சர்மா முதலிடத்திலும், 324 சிக்ஸர்களுடன் சுரேஷ் ரெய்னா இரண்டாவது இடத்திலும், விராட் கோலி 315 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும், தோனி 303 ரன்களை அடித்து நான்காவது இடத்திலும் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 14 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு

G SaravanaKumar

அணிலை கருணை கொலை செய்த பிரிட்டன் அரசு

G SaravanaKumar

இரண்டு குதிரைகள் மீது மக்கள் மாறி மாறி சவாரி செய்கிறார்கள் – விஜயபிரபாகரன்

EZHILARASAN D