கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை பெரும்பாக்கத்திற்கு குடியமர்ந்தும் உத்தரவை மறுபரிசீலனை செய்யமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தீவுத்திடல் எதிரே அமைந்துள்ள காந்திநகர் பகுதியில் வசிக்கும் மக்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி, சென்னைக்கு அப்பால் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரும்பாக்கத்தில் குடியமர்த்தபடுகின்றனர். இதனை மறுபரிசீலனை செய்யுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் ஜி. செல்வா ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னைக்கு அப்பால் பெரும்பாக்கத்தில் குடியமர்த்தபடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் காந்திநகர் மக்களை, 77வது வட்டம் கேசவ பிள்ளை பூங்கா பகுதியிலுள்ள குடியிருப்புகளை அரசு அவர்களுக்கு வழங்குமாறும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.