காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஏழை பெண்களுக்கு மோடி பரிசு.
உஜ்வாலா திட்டம் பாஜகவினர் மிகப்பெரிய வெற்று வாக்குறுதி இன்று அம்பலமாகிறது.
2016: 12 சிலிண்டர்கள் மானியம்
கடந்த ஆண்டு: 9 சிலிண்டர்களாக குறைப்பு
இன்று: வெறும் 4 சிலிண்டர்களாக மேலும் குறைப்பு!
ஒரு ஏழை பெண் 365 நாளும் சமைக்க வேண்டும், மோடி அரசு வெறும் 4 முறை மட்டுமே மானியம் தருகிறது!
“சராசரி நுகர்வு 4 சிலிண்டர்தான்” என்று அரசு சொல்கிறது – உண்மை என்னவென்றால், ஏழை குடும்பஙகள் வாங்க வசதியில்லாதால் குறைவாக பயன்படுத்துகின்றனர், தேவை இல்லாததால் அல்ல. இந்தியாவின் ஏழை பெண்களுக்கு மோடியால் இழக்கப்பட்ட துரோகம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




