கொரோனா தொற்றை உறுதி செய்யும் RT – PCR பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றை உறுதிபடுத்தும் RT-PCR பரிசோதனைக்கான கட்டணம் 400 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழு மாதிரிகளுக்கான கட்டணம் 150 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளியாக இல்லாதவர்கள், தனியார் ஆய்வுக் கூடங்களில் RT-PCR பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை 700 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: “சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு: போராட்டம் அறிவிப்பு”
மேலும், வீட்டில் சென்று பரிசோதனை செய்யும் கூடுதல் கட்டணமான 300 ரூபாய் மாற்றமின்றி தொடர்வதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நோய்தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் தயக்கம் இன்றி பரிசோதனை செய்ய முன்வருவார்கள் என கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








