ஜம்முவில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆர்டிஎக்ஸ் மற்றும் நைட்ரேட் கலவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து பகுதியில் கடந்த 24ம் தேதி நடைபெற்ற பஞ்சாயத்து ராஜ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அதற்கு அருகே பிஷ்னா என்ற பகுதியில் அமைந்துள்ள லாலியன் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் வெடிகுண்டு வெடித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து காஷ்மீர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், இது தீவிரவாத செயலுடன் தொடர்புடையது அல்ல என்றும், விண்கல் தாக்கத்தின் விளைவாக இருக்கலாம் எனவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்த பகுதியில் மத்திய தடய அறிவியல் மையம் சோதனை நடத்தியது. இச்சோதனையின் போது, குண்டு வெடித்த இடத்தில் ஆர்டிஎக்ஸ் மற்றும் நைட்ரேட்டின் கலவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான அறிக்கையை மத்திய தடய அறிவியல் மையம் அளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.