25.5 C
Chennai
November 29, 2023
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் விளையாட்டு

”நீங்க இங்க வராவிட்டால் நாங்க அங்க வரமாட்டோம்”- பாகிஸ்தான் அணி திட்டவட்டம்

ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி தங்கள் நாட்டிற்கு வராவிட்டால், தங்கள் அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா செல்லாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமேஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானிலும், 50 ஓவர் உலக கோப்பை தொடர் இந்தியாவிலும் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் செயலாளர் ஜெய் ஷா, ஆசிய கோப்பை தொடரை இருநாடுகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகங்களிடம் இது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமேஸ் ராஜா,  ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வராவிட்டால், தங்கள் அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா செல்லக்கூடாது என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருப்பதாகக் கூறினார். உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்காவிட்டால் அந்த தொடரை யார் பார்ப்பார்கள் என்றும் ரமேஸ் ராஜா கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய ரமேஸ் ராஜா, டி20 உலக கோப்பை தொடர் இறுதிப்போட்டி வரை தங்கள் அணி சென்றதையும் சுட்டிக்காட்டினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy