ராம் சரண் மற்றும் பிரியங்கா சோப்ரா சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
95வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மார்ச் 13ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளது. இதில் இயக்குநர் ராஜமெளலி தனது ஆர்ஆர்ஆர் படக்குழுவுடன் பங்கேற்கிறார். மேலும், ரெட் கார்ப்பெட்டில் நடக்க பிரியங்கா சோப்ராவும் ஆஸ்கர் விருது வழங்க தீபிகா படுகோனும் ஆஸ்கர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
ஆஸ்கர் விழாவுக்காக ராம்சரண், ஜூனியர் என்டிஆர், தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட இந்திய நடிகர்கள் லாஸ் ஏஞ்சல்ஸூக்கு சென்றுள்ளனர்.ஆர்ஆர்ஆர் படத்தின் கதாநாயர்கள்ன ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் இது தொடர்பாக பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வருகின்றனர். அதன்படி, ஜூனியர் என்டிஆர் ஹாலிவுட் ரசிகர்களுடன் ஒரு பக்கம் போட்டோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார். இன்னொரு பக்கம் நடிகை பிரியங்கா சோப்ரா ராம்சரண் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களும் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
ஆஸ்கர் விழாவுக்கு ரெடியான பிரியங்கா சோப்ரா வெள்ளை நிற பஞ்சு போன்ற உடையை அணிந்து கொண்டு தனியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், ராம்சரண் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றன. 10 வருஷம் கழித்து இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை ரசிகர்கள் கம்பேர் செய்து 10 வருட சவால் என டிரெண்ட் செய்து வருகின்றனர்.