ஆபாசப் பட விவகாரம்: ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஊழியர்கள் சாட்சியம்

ஆபாசப் பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தாரா வுக்கு எதிராக அவர் நிறுவனத்தின் நான்கு ஊழியர்கள் சாட்சியம் அளித்திருப் பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி.…

ஆபாசப் பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தாரா வுக்கு எதிராக அவர் நிறுவனத்தின் நான்கு ஊழியர்கள் சாட்சியம் அளித்திருப் பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் ’குஷி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். பிரபுதேவாவுடன் ’மிஸ்டர் ரோமியோ’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இவர் கடந்த 2009-ம் ஆண்டில் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஆபாசப் படங்களை தயாரித்து விற்றது தொடர்பாக, ராஜ் குந்த்ரா சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். ஆபாசப் படங்களை தயாரித்து விற்பனை செய்தது, அதற்காக தனி செயலியை உருவாக்கியதில் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்ததை அடுத்து மும்பை போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை எடுக்கவில்லை என்றும் பாலியல் கிளர்ச்சியூட்டக் கூடிய படங்களை மட்டுமே எடுத்தார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், ராஜ்குந்த்ராவிடம் பணியாற்றிய நான்கு ஊழியர்கள் அவருக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அவர் மீது அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.