ஆதாரங்களுடன் புகார்கள் கிடைக்கப் பெற்றதாலும், தகுந்த முகாந்திரம் இருந்ததாலும் மட்டுமே லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனைக்கு செல்கின்றனர் என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் தனியார் நிறுவனத்தில் புதிய பைக் ஒன்றை சட்டத் துறை அமைச்சர்
ரகுபதி அறிமுகம் செய்து வைத்தார் . இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பல்வேறு பொது நல அமைப்புகள் சார்பில் ஆதாரத்துடன புகார்கள் வரப்பட்டதன் காரணமாகவே முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்களது வீடுகளில் சோதனை செய்யும்போது பழிவாங்கும் நடவடிக்கை என்று தான் கூறுவார்கள். இது இயல்பான ஒன்று. ஆனால் தற்போது முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. பழிவாங்கும் அரசாக திமுக அரசு செயல்படவில்லை.
பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்கள் அளித்து வருகின்றன. புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆராய்ந்து அதில் உண்மை தன்மை தெரிந்த பிறகுதான் முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தப்பட்டு அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் பிறகு குற்ற பத்திரிக்கை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் திமுக அமைச்சர்கள் மீதும் சோதனைகள் நடைபெற்று வந்தன.
அதை திமுக அமைச்சர்கள் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற
தீர்ப்பு எவ்வாறு அமைகிறது என்பதை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டை தங்களது அதிகார பலத்தை கொண்டு இரண்டாக சேர நாடு, பாண்டியநாடு என பிரித்தாலும் திராவிட மாடல் ஆட்சியை அசைத்து கூட பார்க்க முடியாது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள 5 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு கிடையாது. எனவே அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.