புஷ்பா – 2 திரைப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு திருப்பதியில் நடைபெற உள்ளது.
அல்லு அர்ஜீன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் ஃபகத் பாசில், சுனில், அஜய் கோஷ், மைம் கோபி உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கிய இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் இந்தியில் அதிக வசூலை ஈட்டியது. இந்தியில் மட்டும் ரூ,100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புஷ்பா இரண்டாம் பாகத்தின் படபிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த அல்லு அர்ஜீனுக்கு இரண்டாம் பாகத்தில் நடிக்க இரண்டு மடங்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல இயக்குனர் சுகுமாருக்கு இரண்டு மடங்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.
முதல் பாகத்தில் பஹத் பாசில் நடித்த காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில் கால்சீட் பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் புஷ்பா இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படகுழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா இரண்டாம் பாகத்தின் படபிடிப்புக்கு தேவையான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படகுழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் உள்ளவர்கள் ஜீலை 3, 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள படகுழு அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக சித்தூர் வட்டார மொழி பேசும் ஆண், பெண், குழந்தைகள் என அனைத்து வயதினரும் திருப்பதியில் நடைபெறும் ஆடிஷனில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடிகர்கள் தேர்வு நடக்க உள்ளது. ஆடிஷனில் தேர்வு செய்யப்படுபவர்கள் புஷ்பா இரண்டாம் பாகம் திரைப்படத்தில் இடம் பெறுவார்கள். இந்த புதிய அறிவிப்பு ரசிகர்களையும், புதுமுக நடிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
– தினேஷ் உதய்