ஏழைப்பெண்களின் திருமணத்திற்காக தங்கம் வழங்கும் தமிழ்நாடு அரசின் 4 திட்டங்களுக்காக 62.4 கிலோ தங்கம் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
தமிழ்நாட்டில், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம் ஆகிய 4 திட்டங்கள் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு தங்கம் வழங்கும் வகையில் தமிழ்நாடு சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இத்திட்டங்களின் மூலம் பயனாளிகளுக்கு நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. 2022 – 2023 ஆண்டில் 7,800 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், சமூக நலன் & மகளிர் உரிமைத்துறை சார்பாக 62.4 கிலோ தங்கம் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் 5 திட்டங்களின் கீழ் 94,700 பயனாளிகளுக்காக 757.6 கிலோ தங்கம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த 5 திட்டங்களுள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டமானது, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.