புனே சொகுசு கார் விபத்து – மேலும் 2 பேர் கைது!

புனேவில் நடந்த சொகுசுகார் விபத்து வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் கல்யாணி நகரில் கடந்த மே 19ஆம் தேதி, மதுபோதையில் 17 வயது சிறுவன் சொகுசு…

புனேவில் நடந்த சொகுசுகார் விபத்து வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் கல்யாணி நகரில் கடந்த மே 19ஆம் தேதி, மதுபோதையில் 17 வயது சிறுவன் சொகுசு காரை வேகமாக இயக்கி ஏற்படுத்திய விபத்தில், தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் காரை இயக்கிய சிறுவன், குழந்தைகளை கவனக்குறைவாக விடுதல் மற்றும் குழந்தைகளுக்கு போதை அல்லது மதுப் பழக்கம் ஏற்பட அனுமதிப்பது போன்ற பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறுவனின் தந்தை அகர்வால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் மருத்துவமனையில் ரத்த மாதிரியை மாற்றிய குற்றத்துக்காக சிறுவனின் தாயும், விபத்தை தான் ஏற்படுத்தியதாக சரணடையுமானு கார் ஓட்டுநரை வலியுறுத்திய சிறுவனின் தாத்தாவும், ரத்த மாதிரியை மாற்றிய மருத்துவர்கள் என 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களின் மீது 900 பக்க குற்றப்பத்திரிக்கையை புனே காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்நிலையில் சிறுவனின் ரத்தமாதிரியை மாற்றிய குற்றச்சாட்டில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரும் சிறுவனின் தந்தைக்கும், மருத்துவருக்கும் பணபரிமாற்றம் செய்ய உதவியவர்கள் என காவல்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.