அதிமுக முன்னாள் அவைத்தலைவரும் பாடலாசிரியருமான புலவர் புலமைப்பித்தன் சென்னையில் காலமானார்.
புலவர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. மூச்சு திணறல் காரணமாக சென்ன்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் இருந்து அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு நீலாங்கரையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
இதுவரை அவர் 4 முறை 4 முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை பெற்றுள்ளார். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆருக்கு நெருக்கமான புலமைப்பித்ததன், அவரது பல்வேறு திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். ஆயிரம் நிலவே வா, நான் யார் நான் யார் போன்ற பாடல்களை எழுதியுள்ளார்.







