புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு அம்மாநிலத்தில் 1500க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
4 நாட்களாக உடல் சோர்வுடன் இருந்த ரங்கசாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.







