30.2 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்!!

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. சிங்கப்பூரின் டெலியோஸ்-2 மற்றும் லூம்லைட்-4 ஆகிய இரு செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நேற்று இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கிய நிலையில், இன்று மதியம் 2.19 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. முதன்மை செயற்கை கோளான டெலியோஸ்-2, மொத்தம் 741 கிலோ எடை கொண்டது. இது புவி கண்காணிப்புகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. 16 கிலோ எடை கொண்ட சிறிய செயற்கை கோளான லூம்லைட்-4, கடல்சார் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : முதலமைச்சரின் காலை உணவு திட்டம் – விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ராக்கெட்டின் நான்காம் நிலை பகுதியில், போயம்-2 என்ற விண்வெளி ஆய்வு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இஸ்ரோ, இந்திய வான்வெளி இயற்பியல் ஆய்வு நிறுவனம் உட்பட 4 நிறுவனங்கள் இணைந்து இந்த சாதனங்களை உருவாக்கி உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading