அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைகோளான ஓசன்சாட்-3 செயற்கைகோளை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் 25 மணி 30 நிமிட நேர கவுன்டவுணுக்கு பின்னர், இன்று காலை 11 மணி 56 நிமிடத்திற்கு பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
44.4 மீட்டர் நீளமுள்ள அந்த ராக்கெட் மொத்தம் 9 செயற்கைகோள்களை சுமந்து சென்றது. ஓசன்சாட் வகை செயற்கைகோள்களில் 3ம் தலைமுறை அதிநவீன செயற்கைகோளான ஓசன்சாட்-3 செயற்கைகோள் மற்றும் 8 நானோ செயற்கைகள் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் விண்ணில் சீறிப்பாய்ந்தன.
ராக்கெட் புறப்பட்ட 17வது நிமிடத்திலிருந்து ஓசான்சாட்-3 உள்பட ஒவ்வொரு செயற்கைகோளாக வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. ஓசன் சாட்-3 செயற்கைகோள் கடல் பகுதிகளில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றங்களை துல்லியமாக அறியக்கூடியது என்பதால் வானிலை மாற்றங்களை துல்லியமாக கண்டறிந்து அறிவிக்க பெரும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. 9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.