30 C
Chennai
May 14, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சர்ச்சை பேச்சு : விழுப்புரம் பா.ஜ.க தெற்கு மாவட்ட தலைவருக்கு எதிராக தொண்டர்கள் போராட்டம்

விழுப்புரம் பா.ஜ.க தெற்கு மாவட்ட  தலைவர்  கலிவரதனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  வி.ஏ.டி கலிவரதன் பதவி வகித்து வருகிறார்.  இவர் கடந்தாண்டு பா.ஜ.க பெண் நிர்வாகிகளிடம் ஆபாசமாக பேசும் விவகாரம் சர்ச்சையானது. இதனையடுத்து அவரின் மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் அடுத்த இரு மாதங்களில் விழுப்புரம் பா.ஜ.க இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில்,  தெற்கு மாவட்ட தலைவராக கலிவரன் நியமிக்கப்பட்டார்.  இதற்கு கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எதுவுமே தெரியாது என கலிவரதன் மாவட்ட ஐ டி விங் பிரிவு தலைவருடன்  பேசும் ஆடியோ வெளியானது. இதனைக்கண்டித்து விழுப்புரம் எல்லிச்சத்திரம் சாலை பாஜக அலுவலகத்தில்  தொண்டர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கட்சி நிர்வாகிகளுக்கு கலிவரதன் உரிய மரியாதை தருவதில்லை என குற்றம்சாட்டினார். ஆனால்  அலுவலகத்தின் வெளியே தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், எந்த சலனமும் இல்லாமல் கலிவரதன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை ஈடுபட்டிருந்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading