36.1 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் குற்றம்

சொத்து தகராறு: தந்தை உயிரிழப்பு; தாய் அடித்துக் கொலை

சொத்துத் தகராறில் தந்தை உயிரை மாய்த்துக் கொண்ட
நிலையில், தாயை உறவினர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேர்ணாம்பட் அருகில் உள்ள சின்ன தாமல் செருவு கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். விவசாயம் செய்தும், மாடு வளர்த்தும் வருகிறார். இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு மலர்மன்னன் (21), சாரதி (19) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். சதாசிவத்திற்கும், அவரது மூத்த சகோதரர்கள் ரவி, குமார் ஆகியோருக்கும் பூர்வீக சொத்து பிரிப்பதில் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், ஜூன் 3ஆம் தேதி இரவு மீண்டும் சொத்துப் பிரச்னை சண்டையாக மாறியதில்
மன உளைச்சலுடன் தூங்கச் சென்ற சதாசிவம், காலை வீட்டின் பின்பக்கம் உள்ள
மாட்டுக் கொட்டகையில் தூக்கில் தொங்கியவாரு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அழுது கூச்சலிட்ட மனைவி சரிதா என் கனவனை இப்படி சாகடித்து
விட்டீர்களே என கனவரின் சகோதரர்களைப் பார்த்து கேட்டதில் ஆத்திரமடைந்த
ரவி, குமார் மற்றும் உமாசங்கர் ஆகியோர் சேர்ந்து சரிதாவை அடித்து கீழே
தள்ளியுள்ளனர். இதில் தலை மற்றும் முகத்தில் படுகாயமடைந்த சரிதா
மயங்கி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், சதாசிவத்தின் இறப்பை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்காமல்
அவசர அவசரமாக எரியூட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அன்று மாலையே தாய் சரிதாவின்
உடல் நிலை மோசமடைந்ததால் வேலூர் CMC மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதன் பின் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சென்னையில் சரிதாவை
சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் சரிதாவின்
தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளதால் உடல்நிலைப் மிகவும் மோசமாக
இருப்பதாகக் கூறியுள்ளனர். இந்நிலையில், 6ஆம் தேதி அன்று விடியற்காலை சிகிச்சை
பலனின்றி சரிதா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக கண்ணீர் மல்க
கூறுகின்றார் மகன் மலர்மன்னன்.

இதனிடையே பேர்ணாம்பட் காவல் நிலையத்தில் சரிதாவை அடித்து தாக்கியவர்கள்
மீது கொலை வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த சதாசிவத்தின் அண்ணன் ரவி, மற்றொரு அண்ணன் குமார், ரவியின் மகன் உமாசங்கர், தங்கையின் மகன் தரணிஷ்பாபு ஆகியோர் மீது (302) கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற
உத்திரவின்படி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்த இரு தினங்களில் தாய். தந்தையை இழந்து நிர்க்கதியாக நிற்கும் இரு இளைஞர்களைப் பார்த்து அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மலர்மன்னன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டும், சாரதி தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading