முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், புதிய கட்டமைப்பு வசதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தை , நவீன முறையில் வடிவமைத்திருக்கிறது பள்ளிக் கல்வித்துறை. தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் தரும் அரசு என்பதை தன் செயல்பாடுகளின் மூலம் நிரூபித்துவருகிறது. பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது. அந்தத் திட்டங்களுக்கு உறுதுணை புரியும் வகையில் , கட்டமைப்பு வசதிகளை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுப் புலம் ( Assessment cell ) , முன்னோட்டக் காட்சி அரங்கம் ( Preview theatre ) , 14417 உதவி எண்ணுக்கான அழைப்பு மையம் ஆகியவற்றை நவீன முறையில் வடிவமைத்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை.

இவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் , இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவற்றைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பள்ளிக் கல்விக்கான அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர் .

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீலகிரியில் கால்நடைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் -தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Web Editor

‘நாங்க தோற்றதுக்கு அதுதான் காரணம்…’ விராத் கோலி வருத்தம்

Halley Karthik

காதலரை பிரிகிறார் நடிகை எமி ஜாக்சன்?

Gayathri Venkatesan