ஆஸ்கார் விருதுகள் 2023 நிகழ்ச்சிக்கு தயாராவதாக கூறி, பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ரசிகர்களை மயக்கும் வகையில் வெள்ளை நிற உடையில் புகைபபடம் எடுத்து, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று இரவு அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மார்ச் 13-ஆம் தேதி அதாவது நாளை அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிகளை அகாடமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், யூடியூப் சேனல் மற்றும் ABC சேனல், ஸ்டார் மூவிஸ் போன்றவற்றில் கண்டு ரசிக்கலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஆஸ்கர் விருது விழா மேடையில் இந்திய சினிமாவை சேர்ந்த இயக்குநர் ராஜமெளலி தனது ஆர்ஆர்ஆர் படக்குழுவுடன் பங்கேற்கிறார். மேலும் ஆஸ்கர் விழாவில் ரெட் கார்ப்பெட்டில் நடக்க பிரியங்கா சோப்ராவும், ஆஸ்கர் விருது வழங்க தீபிகா படுகோனும், தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் தங்களது குடும்பத்தினருடன் லாஸ் ஏஞ்சல்ஸூக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதாநாயர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் பல புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம் நடிகை பிரியங்கா சோப்ரா, ராம்சரண் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களும் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
மேலும் ஆஸ்கர் விழாவுக்கு ரெடியான பிரியங்கா சோப்ரா நேற்றே வெள்ளை நிற பஞ்சு போன்ற கௌன் உடையை அணிந்து கொண்டு தனியாக போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை ஸ்பெஷலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது அழகிய வெள்ளை நிற கௌன் அணிந்து, வித்யாசமான போஸ்களில் தேவதை போன்று எடுத்துக்கொண்ட இந்த புகைப்படங்கள் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹாலிவுட், பாலிவுட் என நடித்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது இளையவரை திருமணம் செய்து கொண்டார் என்று அப்போது நிறைய விமர்சனங்களை சந்தித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டார். மகளுக்கு மால்டி மேரி சோப்ரா ஜோன்ஸ் என பெயர் வைத்துள்ளார். அவ்வப்போது மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா