24 C
Chennai
December 4, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் 75வது சதம் விளாசிய விராட் கோலி

பார்டர் கவாஸ்கர் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 75வது சதம் அடித்துள்ளார் விராட் கோலி.

இந்தியா – ஆஸ்திரேலியா  இடையே பார்டர் – கவாஸ்கர்  கோப்பை டெஸ்ட்  கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தமாக 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2போட்டிகளில் இந்தியாவும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா முன்னிலையில் உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பார்டர் கவாஸ்கர் கோப்பையின்  4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா அணி தற்போது விளையாடி வருகிறது. இந்திய அணி தற்போதய நிலவரப்படி 143.1 ஓவரின் முடிவில்  5 விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் எடுத்துள்ளது.

இதனையும் படியுங்கள்: மந்தனா தலைமையில் மந்தமா? – மகளிர் ஆர்சிபிக்கும் தோல்விகள் தொடரும் சோகம்

இப்போட்டியில் விராட் கோலி தனது 75வது சதத்தை பதிவு செய்துள்ளார். 1207 நாட்களுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி சதம் விளாசியுள்ளார். கடைசியாக 2019 நவம்பர் மாதம் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். 241 பந்துகளில்  சதம் விளாசியுள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 75 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 28 சதங்களும் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை இந்தியா கைப்பற்றினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு  வாய்ப்புள்ளது. விராட் கோலியின் சதம் இந்திய அணிக்கு நம்பிக்கையை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy