சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
சாதி, மத, வழக்கு பேதமின்றி 20 ஆண்டுகளை கடந்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழ்நாடு அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மஜக உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து கடந்த 30. 08. 23 அன்று மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல் குடியில் இக்கோரிக்கை நிமித்தமாக மீண்டும் சந்தித்து பேசினார். அப்போது மஜக சார்பில் அவரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது..
“ கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் சிறைவாசிகள் விடுதலை குறித்து வாக்குறுதி அளித்திருந்தார். கடந்த அண்ணா பிறந்தநாளுக்கு முன்பாக தங்களை சந்தித்து இது குறித்தும், இதற்காக அமைக்கப்பட்டிருந்த ஆதிநாதன் ஆணையம் குறித்தும் பேசினோம்.
கடந்த செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளையொட்டி இது குறித்த நல் அறிவிப்பினை எதிர்பார்த்திருந்தோம். அது பற்றி ஏதும் அறிவிக்கப்படாதது மக்களிடையே ஏமாற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், சமூக வழக்குகள் தொடர்புடைய கைதிகள் உள்ளிட்ட பலரின் விடுதலையில் பாரபட்சம் காட்டப்படுவதாக பரவலாக கருத்துள்ளது.
இவர்கள் விஷயத்தில் பேரறிவாளன், ரவிச்சந்திரன் தொடர்பாக பின்பற்றப்பட்ட சட்ட நடவடிக்கைகளை எடுப்பதே தீர்வாகும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இவர்களின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையில் 161 வது பிரிவை பயன்படுத்தி தமிழக அரசு ஒரு தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் . இத்தீர்மானத்தை ஆளுநர் மறுத்தாலும், அது சட்டப் போராட்டத்திற்கு பெரிதும் உதவிகரமாக அமையும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
எனவே இதை வலியுறுத்தி அக்டோபர் 9 அன்று கூட விருக்கும் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுக்கு மத்தியில் ஒரு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இச்சிக்கல் தீரும் வரும் சம்மந்தப்பட்ட அனைத்து கைதிகளுக்கும் நீண்ட கால சிறை விடுப்பு வழங்க ஆவணம் செய்யுமாறு மனித நேய ஜனநாயக கட்சியின் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். “ இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.