33.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

ராணி எலிசபெத்தின் இறுதிசடங்கு முடித்துவிட்டு இந்தியா திரும்பினார் குடியரசு தலைவர்

லண்டனில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று  டெல்லி திரும்பினார். 

இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில தினங்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர் கடந்த 8ம் தேதி இரவு காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு நாட்டின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்தியாவில் எலிசபெத்தின் மறைவையொட்டி செப்டம்பர் 11ம் தேதி ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விமானம் மூலம் லண்டன் சென்றார். அவர் ராணி எலிசபெத் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தியபின், வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனை அடுத்து லண்டனில் இருந்து விமானம் மூலம் இந்தியா புறப்பட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று டெல்லி வந்தடைந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading