பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் மின்வாரியம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில்…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் சார்பில் முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் அமைச்சர் செந்தில்
பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். கோவை மாநகராட்சியில் நூறு 100 வார்டுகளிலும் 846 பகுதி சபை அமைக்கப்பட்டு பொது மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள 80 அடி சாலையில்
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நகர சபை கூட்டம்
நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர்
பிரதாப், மேயர் கல்பனா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில்
பொதுமக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்களை அமைச்சரிடம்
வழங்கினர்.

முன்னதாக பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த நகர சபை கூட்டங்கள் மூலம் பொது மக்கள் கோரிக்கைகளை குறைகளை கேட்டு அறிந்து அரசு செயல்படுத்த வேண்டும் என்று சீரிய நோக்கத்தோடு தமிழக முதல்வர் அரசாணை வெளியிட்டார் எனவும், கோவையில் 846 பகுதி சபா அமைக்கப்பட்டு மக்கள் சபை கூட்டம் நடந்து வருகிறது.வருடத்தில் ஆறு கூட்டங்கள் நடத்தபடும் எனவும், முதல்வர் கோவையில் 10 தொகுதியிலும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இருந்தாலும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பார்க்காமல் திட்டங்கள் செயல்பட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, பருவ மழையை
முன்னிட்டு மின்வாரியம் சார்பில் எடுக்கபட உள்ள நடவடிக்கைகள் குறித்து
ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளன.
ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கபட்டு 24 மணி நேரமும் பணி செய்ய ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாகவும் தெரவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.