தபால்துறையில் உள்ள கணக்காளர் பணிகளுக்கான தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தபால் துறையில் உள்ள கணக்காளர் பணிகளுக்கான தேர்வுகள் நாடு முழுவதும் வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வெளியிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. தமிழ் இடம்பெறததால் இதற்கு தமிழகத்தில் கடும் எதிப்பு கிளம்பியது.
இந்நிலையில் தபால்துறை கணக்காளர் தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அஞ்சல்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அடுத்த மாதம் 14 ஆம் தேதி நடைபெறும் தபால்துறை கணக்காளர் தேர்வை தமிழில் எழுதலாம், தமிழக சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் இந்த தேர்வை ஆங்கிலம், ஹிந்தி அல்லது தமிழில் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







