பொருநை அருங்காட்சியகம் அறிவிப்புக்கு வரவேற்பு

திருநெல்வேலியில், ரூ.15 கோடி மதிப்பில் பொருநை என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய…

திருநெல்வேலியில், ரூ.15 கோடி மதிப்பில் பொருநை என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய 3 இடங்களில் நடைபெறும் ஆய்வுப் பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த திருநெல்வேலியில் பொருநை என்ற பெயரில் 15 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும், இந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் 3 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையானவை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

முத்தாலங்குறிச்சி காமராசு, எழுத்தாளர்

கீழடி நாகரிகம் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையானது என கூறப்பட்ட நிலையில், பொருநை நாகரிகம் 3 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, அருங்காட்சியகம் குறித்த முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

சிவகளை மாணிக்கம், வரலாற்றாசிரியர்

சிவகளை நாகரிகம் 3 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையானது என்று அறிவித்துள்ளது தாமிரபரணி ஆற்று நாகரிகத்தில் ஒரு மைல் கல் என வரலாற்றாசிரியர் சிவகளை மாணிக்கம் தெரிவித்துள்ளார். அங்கு கிடைத்த மேலும் பல பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்தினால் பல வரலாறுகள் வெளிவரும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.